கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!
ஆர் ஜி கர் மருத்துவ மாணவியின் தாயார் தேர்தலில் வெற்றி
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் அம்மா மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொல்கத்தாவின் ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவுப் பணியிலிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
Advertisement
இந்நிலையில், அந்த மாணவியின் அம்மா ரத்னா தேப்நாத் 2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பானிஹட்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவர் 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு இரண்டாமிடமே கிடைத்தது.