முகப்பு
வேலைவாய்ப்பு

பி.இ./ டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி(தமிழ்நாடு) மற்றும் வலியமலா(கேரளா) ஆகிய

Updated On : 23 ஆகஸ்ட் 2013, 8:39 pm IST
பகிர்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி(தமிழ்நாடு) மற்றும் வலியமலா(கேரளா) ஆகிய இடங்களில் உள்ள திரவ எரிபொருள் திட்ட மையத்தில் அளிக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு பி.இ., டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி பிரிவு: Graduate Apprentice

மொத்த காலியிடங்கள்: 74

Advertisement

Advertisement

பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், நூலக அறிவியல்

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் துறைக்கு பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊக்கத்தொகை: ரூ.5000 அளிக்கப்படும்.

பயிற்சி பிரிவு: Technician Apprentice

மொத்த காலியிடங்கள்: 120

பயிற்சி பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில்,

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மாத ஊக்கத்தொகை: ரூ.3000 அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2013

ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி நாள்: 30.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lpsc.gov.in என்ற இமையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments