வேலைவாய்ப்பு

மத்திய அரசுப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

மத்திய அரசுப்பணிக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி

மத்திய அரசுப்பணிக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மே 8-ஆம் தேதி ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய தலைமைச்செயலக சேவையில் உதவி பிரிவு அதிகாரி; சிவிசி, ஐபி, ரயில்வே, வெளியுறவு, ஆயுதப்படை தலைமையகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உதவியாளர்; வருமானவரித்துறையில் ஆய்வாளர், வரி உதவியாளர்; மத்திய கலால்துறையில் ஆய்வாளர்; மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஆய்வாளர்; அமலாக்க இயக்குநரகத்தில் உதவி அமலாக்க அதிகாரி; சிபிஐ மற்றும் என்ஐஏ ஆகியவற்றில் உதவி ஆய்வாளர்; அஞ்சல்துறையில் அஞ்சல் ஆய்வாளர்; மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் கோட்ட கணக்காளர், கணக்காளர், இளநிலை கணக்காளர், பட்டயக்கணக்காளர்; புள்ளியியல்துறை அலுவலகத்தில் புள்ளியியல் ஆய்வாளர்; பதிவுத்துறையில் தொகுப்பாளர்; பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் முதுநிலை தலைமைச்செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

2016 ஆக.1 ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை http://ssconline2.gov.in, http://sscregistration.nic.in ஆகிய இணையதளங்களில் செலுத்தலாம். இப்பணியிடங்களுக்கு சராசரியாக ரூ.38 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

பெங்களூரு போன்ற நகரங்களில் வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தால் ரூ.4500 கூடுதலாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT