கிருஷ்ணகிரியில் ஜன.23-ஆம் தேதி (திங்கள்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன்,வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன.23-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சென்னையை சேர்ந்த ஸ்கைபுரோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினர் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. அதன்படி டேட்டா கன்வெர்டர், டேட்டா ஆபரேட்ர் ஆகிய பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ரட்டைய படிப்பில் (டிப்ளமோ) தேர்ச்சி பெற்றவர்கள், 21 வயதிற்கு மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 8500 முதல் ரூ. 9,200 மற்றும் ஊக்கத் தொகே வழங்கப்படும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.
எனவே, இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகிற 23-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் அவர் தெரிவித்தார்.