வேலைவாய்ப்பு

10-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தினமணி


இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தரும் நோக்கத்திலேயே ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு நடத்தப்பட இருக்கிறது.
முகாமில் முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களைத் தேர்வு செய்யவும் உள்ளன. எனவே இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். இதில், பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட நாளில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்துக்கு வந்து விட வேண்டும். இதில் பங்கேற்று, பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT