வேலைவாய்ப்பு

ரூ.67,700 சம்பளத்தில் சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் வேலை: முதுகலை பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி தொழிற்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி தொழிற்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist (Gr.IV)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: பொறியியல் துறையில் Highway, Transportation Engg, Rock Mechanics, Geotechnical Engineering பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Controller of Admisistration, CSIR-Central Road Research Institute, Delhi - Mathura Road, PO - CRRI, New Delhi - 110 025.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2019

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT