FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக ஐடிபிஐ வங்கி 920 Executive பணியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2021, 8:10 am IST
பகிர்:

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக ஐடிபிஐ வங்கி 920 Executive பணியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive

காலியிடங்கள்: 920

Advertisement

Advertisement

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:  முதல் வருடம் மாதம் ரூ.29,000, இரண்டாம் வரும் மாதம் ரூ.31,000, மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments