வேலைவாய்ப்பு

ரூ.1,40,000 சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை கணக்கு அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை கணக்கு அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Air India Air Transport Services Limited

பணி: Chief Financial Officer - 01

பணியிடம்: தில்லி

தகுதி: சிஏ தேர்ச்சியுடன் பணி சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தெளிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: மாதம் அதிகபட்சமாக ரூ.1,40,000 வழங்கப்படும்.

வயது வரம்பு : 01.10.2021 தேதியின்படி, 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, தயாரித்தோ, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், கூரியர் மூலம் அனுப்பலாம்.  அஞ்சல் உறையின் மீது “Chief Financial Officer, AIASL” எழுதியிருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: Asst. General Manager (P), AI Airport Services Limited.  Air India GSD Building,
1st Floor, Next to Gate No.5, Chhatrapati Shivaji Maharaj International Airport, Terminal-2, Sahar, Andheri (E), Mumbai-400099, India.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 12.10.2021

மேலும் விவரங்கள் அறிய 
https://www.airindia.in/writereaddata/Portal/career/961_1_Advertsiement-for-CFO-AIASL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

SCROLL FOR NEXT