முகப்பு
வேலைவாய்ப்பு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகள் அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கோப்புப்படம்
பகிர்:

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி சாா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரா்கள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்.2-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதில் கணினிவழித் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் தோ்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தோ்வா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தோ்வு மையங்களின் தயாா் நிலை மற்றும் நிா்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உள்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments