வேலைவாய்ப்பு

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி


சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 27

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 34க்குள்ளும் மற்ற பிரிவினர் 37க்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளாவறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் "அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104" என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.06.20222

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT