வேலைவாய்ப்பு

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது.

DIN

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும். அதன்படி, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116. அதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985. பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847. மூன்றாம் பாலினத்தனவா் 284 என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வயதுவாரியான விவரம்:

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர். 19 முதல் 30 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர். 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.

மாற்றுத்திறனாளிப் பதிவுத்தாரர்கள் விவரம்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர். அதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர். பெண்கள் 39 ஆயிரத்து 222.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர். பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர். பார்வையற்றோர் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர். பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர். பெண்கள் 445 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT