கோப்புப்படம்  
வேலைவாய்ப்பு

மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான 1,794 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் இன்று(செப். 3) முதல் அக். 2 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் 16 ஆம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான 1,794 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II-க்கான அறிவிக்கை, இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இன்று(செப். 3) முதல் அக். 2 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை யுபிஐ(UPI) மூலமாகவும் செலுத்தலாம்.

கணினி வழித்தேர்வு முறையில் நவ. 16 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Electricity Distribution Corporation Recruitment Notification for Technical Posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT