உச்ச நீதிமன்றம் 
வேலைவாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் - ஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 90 சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 90 சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். F.21(LC)/2026-SC(RC)

பணி: Law Clerk – Research Associate

காலியிடங்கள்: 90

தகுதி: சட்டத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிக்கும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று பிறகு மூன்றாண்டு சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சேர்வதற்கு முன்பு சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் எழுத்துத் திறன், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், கணினித் திறன் மற்றும் பல்வேறு தேடுபொறிகள் மற்றும் செயல்முறைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,00,000

வயதுவரம்பு: 7.2.2026 தேதியின்படி 20 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளோர் https://www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2026

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Online applications are invited in terms of “Scheme of Engaging Law Clerk-cumResearch Associates on Short-Term Contractual Assignment in the Supreme Court of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்குமார் கொலை வழக்கு: நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை! - சிபிஐ தகவல்

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

SCROLL FOR NEXT