உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் - ஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 90 சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் தொடர்பாக...
உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 90 சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். F.21(LC)/2026-SC(RC)
பணி: Law Clerk – Research Associate
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 90
தகுதி: சட்டத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிக்கும் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று பிறகு மூன்றாண்டு சட்டப் படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சேர்வதற்கு முன்பு சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் எழுத்துத் திறன், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், கணினித் திறன் மற்றும் பல்வேறு தேடுபொறிகள் மற்றும் செயல்முறைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
வயதுவரம்பு: 7.2.2026 தேதியின்படி 20 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளோர் https://www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Online applications are invited in terms of “Scheme of Engaging Law Clerk-cumResearch Associates on Short-Term Contractual Assignment in the Supreme Court of India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.