இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள நிர்வாக அசிஸ்டென்ட் பணிகள் குறித்து...
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனம் "இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்." இந்நிறுவனம் புதிய உள்கட்டமைப்புகள் (கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள்), பல்வேறு புதிய பல்துறைப் பாடத்திட்டங்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டுள்ளதுடன், மேம்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் திகழும் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RCHR/Recruitment-2/2026, Dated: 29th May 2026
Advertisement
Advertisement
பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 34
சம்பளம் : மாதம் ரூ. 29,200 - 92,300
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு.ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in/careers/regular - positions என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.6.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
The Institute is inviting applications from individuals for filling up the following positions through Direct Recruitment
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.