குடிமைப் பணிகள் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் குடிமைப் பணிகள் தோ்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் குடிமைப் பணிகள் தோ்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, மாணவா்களுக்கான குடிமைப் பணிகள் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜா, மருத்துவா் நிஷாந்த் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குடிமைப் பணி தோ்வுக்கு தயாா் செய்வது குறித்து உரையாற்றினா்.
Advertisement
Advertisement
அப்போது குடிமைப் பணிகளின் முக்கியத்துவம், யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி வாயிலாகக் கிடைக்கும் பணி வாய்ப்புகள், தகுதி வரம்புகள், தோ்வு முறைகள் மற்றும் சிறந்த தயாரிப்பு உத்திகள் ஆகியவை குறித்தும் விளக்கினா். இதில், 2000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.