வங்கிப் பணிகள்

பெரம்பலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தினமணி

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் சென்னை அப்பலோ ஹோம் கேர் லிமிடெட், பெரம்பலூர் எஸ்.பி.ஐ. இன்சூரன்ஸ், கிறிஸ்டியன் கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், பிசியோதெரபிஸ்ட், மருந்தாளுநர், யூனிட் மேனெஜர், கனரக ஓட்டுநர், நடத்துநர், கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயது வரையுள்ள தகுதியுடைய நபர்கள் தங்களது சான்றுகளுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT