முகப்பு
அரசுப் பணிகள்

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தில் வேலை!

முன்னணி பயிர்காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில்(ஏஐசி) நிரப்பப்பட உள்ள வேளாண் டிரெய்னி-அக்டோரியல் துறை பணி

Updated On : 17 பிப்ரவரி, 2023 at 2:52 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:02 PM

முன்னணி பயிர்காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில்(ஏஐசி) நிரப்பப்பட உள்ள வேளாண் டிரெய்னி-அக்டோரியல் துறை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது மாதம் ரூ.60,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட போர்டு, இன்ஸ்ட்டியூஷன், பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

1.2.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு www.aicofindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.