தேசியச் செய்திகள்

ஆந்திராவில் வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் சாவு

கர்னூல் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்துக்குள்ளானது.

ENS

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தரிசனம் செய்து கர்னூல் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

15 பேர் படுகாயமடைந்தவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கர்நாடக மாநிலம் ராய்சூர் மற்றும் தெலங்கானா மாநிலம் கொத்தபல்லி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மர்தூரில் நடைபெற்ற மற்றொரு சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் கார் மோதியதில் உயிரிழந்தார். சாலையை வேகமாக கடக்க முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நின்றிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த அவருடைய மகள் படுகாயங்களுடன் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT