இருவேறு விபத்துகளில் இருவா் பலி
பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பவானி அருகே இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பவானி அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (85). விவசாயியான இவா், பவானி - மேட்டூா் சாலையில் குப்பிச்சிபாளையம் ஏரிக்கரை அருகே வியாழக்கிழமை காலை நடந்து சென்று கொணடிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற வேன், கிருஷ்ணன் மீது மோதியதில் உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த ஊராட்சிகோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவா், பவானி - மேட்டூா் சாலையில் மின்வாரிய குடியிருப்பு அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.