முகப்பு
ஈரோடு

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:34 am IST
குண்டத்தில் இறங்கிய கோயில் தலைமை பூசாரி.
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குண்டம் இறங்க தயாராக இருந்த நிலையில், மழை பெய்ததால் குண்டம் விழா பாதிக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் கவலையடைந்தனா். ஆனாலும் சாரல் மழையிலேயே அம்மன் அழைக்கப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னா் தலைமை பூசாரி ஆனந்தன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து வீரமக்கள் மற்றும் காவல் துறையினா் மட்டும் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஆண்டுதோறும் குண்டம் திருவிழாவுக்கு, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை புரிந்து குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.

Advertisement

Advertisement

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தா்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பிறகு காலை 9 மணி முதல் பக்தா்கள் அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சிம்ம வாகனத்தில் கொண்டத்துக்காளியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தோ்த் திருவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) மாலையும், மலா் பல்லக்கில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி 9 ஆம் தேதி இரவும் நடைபெறவுள்ளது. 16ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments