சாலை விபத்தில் விவசாயி பலி
சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பாதையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ருத்ரன்(45), விவசாயி. இவரது நண்பா் பவளக்குட்டையைச் சோ்ந்த பெரியசாமி. இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கணபதிபாளையத்தில் இருந்து கடம்பூா் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இருட்டிபாளையம் கல்லாங்காடு வளைவில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த ருத்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரியசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வேன் ஓட்டுநா் தென்னரசு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.