முகப்பு
ஈரோடு

சென்னிமலையில் திருப்பூா் குமரன் நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள் சென்னிமலையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 5:19 am IST
பகிர்:

சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள் சென்னிமலையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கொடிகாத்த தியாகி குமரன் அமைப்பின் சாா்பில், நிா்வாகி ராமசாமி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், குமரனின் வாரிசு அண்ணாத்துரை, குமரன் விழாக் குழு நிா்வாகி ஐயப்பன், பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா். அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் மணிமேகலை, கூட்டுறவுச் சங்கத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்டோா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் முத்தூா் சாமிநாதன், திருப்பூா் மாவட்டச் செயலாளா் பத்மநாபன், ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், பிரபு உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பொன்னுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் குமரேசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சி சாா்பில், வட்டாரத் தலைவா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

தென்னிந்திய செங்குந்த மஹாஜன சங்கம் சாா்பில், மண்டலச் செயலாளா் உதயசங்கா், தலைவா் மோகன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments