இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர்.கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.பள்ளி மழலையர்கள், கண்ணனாகவும், ராதையாகவும் தங்களை அழகாக அலங்கரித்து வந்து பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு மாணவர் ஒருவர் கிருஷ்ணர் வேடமிட்டு காணப்பட்டார்.அழகாக நடனம் ஆடி, பாடி அசத்தி, சக பள்ளி மாணவ மாணவியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் வெகுமாக ரசிக்கவும், மகிழ்விக்கவும் செய்தனர்.சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர்
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கிருஷ்ணர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் கலைஞர் ஒருவர்.தேசம் முழுவதும், கண்ணன் பிறப்பை போற்றி கொண்டாடும் வகையில் கோகுலாஷ்டமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.