முகப்பு
நிகழ்வுகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பணிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பகிர்:
நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் இந்த நினைவிடத்தில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு உள்ளன.
ஜெயலலிதா நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நினைவிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது, அதிகாரிகள் அங்கு நடக்கும் பணிகளை விளக்கினர்.
முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
கட்டுமானப் பணிகளை பார்வையிட்டும் முதல்வர்.
தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டால் நினைவிட பணிகள் முடக்கப்படும் என்பதால் தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடம் திறக்க அதிமுக அரசு தீவிரமாகி வருகிறது.
கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
கடந்த 3 ஆண்டுகாலமாக இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது...
நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விளக்கும் அதிகாரிகள்.
முதலில் எம்ஜிஆர். நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்,
நினைவிடத்தில் பணிகளை ஆய்வு செய்த முதவ்வர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி .
1982-ல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது, ஜெயலலிதா அதிமுக-வில் இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.