பச்சைக் கிளி சரணாலயம்
கிளிகளை பார்ப்பது மிகவும் அபூர்வம், கிராமப்புறங்களிலே கூட அவற்றை பார்பது அபூர்வமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் ஆயிரக்கணக்கில் கிளிகள் பேட்ச் பேட்சாக வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. கிளிகளுக்கு உணவு வைக்கும் அந்த வீட்டின் வசிப்பவரான கேமரா டெக்னீசியன் சேகர் தினமும் அறுபது கிலோ அரிசியை சுத்தம் செய்து பரிமாறுவதாகவும், இது தன்னுடைய வருமானத்தில் நாற்பது சதவீதம் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தேடி வரும் கிளிகளுக்கும் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ தங்களால் முடிந்த உதவிகளை செய்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த சரணாலயம் பச்சை கிளிகளால் நிரம்பியிருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.