முகப்பு
செய்திகள்

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை மீட்பு

Updated On : 20 நவம்பர், 2020 at 12:23 PM
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டது.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் மீட்டனா்.
ஏலகுண்டூா் கிராமத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. யானை பிளிரும் சத்தத்தைக் கேட்ட மக்கள், வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை மெல்ல மயக்கமடைந்தது. கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை கயிறு கட்டி கிணற்றுக்கு மேலே இழுத்து மீட்புக்குழுவினா் கொண்டு வந்தனா்.
முதல் முயற்சியின் போது, யானையின் உடலில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து, கிணற்றின் பக்கவாட்டில் விழுந்துவிட்டது.
மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து, பின்னர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.