பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, தமிழர்களின் வரலாற்று சிறப்பைப் பறைசாற்றும் வகையில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
பகிர்:
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள்' இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன.
Advertisement
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட உள்ளன.5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டு உள்ளன.21 செப்பேடுகளும் சோழர்களின் புலிச்சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சமஸ்கிருத உரை பொறிக்கப்பட்ட முத்திரை வளையத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.