முகப்பு
அரசியல்

முரசொலி பவளவிழா

பவள விழாவை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் ‘முரசொலி காட்சி அரங்கம்’ திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இந்து ஆசிரியர் ராம், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.