முகப்பு
அரசியல்

கலைஞர் கோட்டம் திறந்து வைப்பு - புகைப்படங்கள்

மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
பகிர்:
சிறப்பு விருந்தினராக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார்.
கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

Advertisement

திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோர் வரவேற்றனர்.
திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments