முகப்பு
மருத்துவம்

நீரழிவு நோய்: மீன், பால் உள்ளிட்ட பொட்டாசியம் நிறைந்த உணவு எடுத்து கொண்டால் சிறுநீரகம், இதயம் பாதிக்காது

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் நீரழிவு நோயாளிகளுக்கு இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படுவதில்லை என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Updated On : 13 நவம்பர், 2015 at 1:04 PM
பகிர்:

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் நீரழிவு நோயாளிகளுக்கு இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படுவதில்லை என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

`டைப்-2'எனப்படும் இரண்டாம் வகை நீரழிவு நோய்க்கு ஆளானவர்களின் சிறுநீரகம், இதயம் சீக்கிரத்தில் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைகழகம் இதுகுறித்து ஆராயாச்சியில் ஈடுபட்டது. அவர்கள் சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் நீரழிவு நோயாளிகளிடம் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

Advertisement

கடந்த 1996 முதல் 2013 வரை 623 இரண்டாம் வகை நீரழிவு நோயாளிகளிடம் அவர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டவர்களின் சிறுநீரக செயல்பாடு நன்றாக இருந்தது தெரியவந்தது. மேலும், சோடியம் உணவுகள் சிறுநீரகம், இதயத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

எந்த உணவு எடுத்து கொள்வது என்பதே பெரும்பாலான நீரழிவு நோயாளிகளின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எங்களது ஆராய்ச்சி முடிவுகள் நீரழிவு ஊட்டச்சத்து சிகிச்சையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

அனைத்து இறைச்சிகள், சாலமன், ஃப்ளவண்டா மற்றும் மத்தி மீன்களில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. காய்கறிகளில் ப்ரோக்கோலி, பட்டாணி, தக்காளி மற்றும் பாலலிலும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.