15 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயிற்சி தான் இது. இதற்கு எவ்வித உபகரணங்கலும் தேவையில்லை. ஒரு நாற்காலி போதுமானது.
- நாற்காலியை எடுத்துக் கொண்டு உட்காராமல் அதன் முன்னால் நிற்கவும்.
- அதே நிலையில் இரு கைகளையும் பின்புறமாக அதன் கைப்பிடியில் பிடித்துக் கொண்டு உடலை சாய்த்த நிலையில் உட்கார்ந்து எழுவது போல அமர்ந்து எழந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது.
- இதனால் கைகளின் பின் பக்கங்களில் உள்ள தசைப் பகுதிகளுக்கு அழுத்தம் கிடைக்கும்.
- ஒரு தடவைக்கு 15 எண்ணிக்கை வீதம் மூன்று தடவைகள் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும்.
- எல்லா வயதினரும் செய்யலாம்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கைகள், இடுப்புப் பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையும். அப்பகுதிகளிலுள்ள தேவையற்ற சதை குறையும்.