செய்திகள்

இதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவனை சாதனை

தினமணி

பிறவியிலேயே இதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதய பாதிப்புகளில் இதய சுவரில் துளை காணப்படுவது முக்கியமானதாகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது:
இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சு பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையில்லாத செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும்.
வாழ்நாள் முழுவதற்கும் இந்தச் சாதனத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
இந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் 7 நோயாளிகளுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை சிகிச்சை நடைபெற்றது. இரண்டரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை என்றனர் அவர்கள்.
தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறையானது, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT