உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- தண்ணீர்விட்டான் கிழங்கு , நெருஞ்சில் இவை இரண்டையும் பாலில் போட்டு வேகவைத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் ஐந்து கிராம் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் , குழந்தைப்பேறு உண்டாகும்.
- தண்ணீர்விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைத்துக் காயவைத்துப் பொடி செய்து , தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.
- தண்ணீர்விட்டான் கிழங்கு , பூனைக்காலி விதை , நெருஞ்சில் , அமுக்கரா , சாலாமிசிரி இவை அனைத்திலும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து 5 கிராம் வீதம் காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து குடித்துவந்தால் ஆண்மைக்குறைவு , நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
- தண்ணீர்விட்டான் கிழங்கு , சுக்கு , மிளகு , திப்பிலி இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
- மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
- கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com