உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: அறுவதா/சதாப்பு இலை

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

அறுவதா/சதாப்பு இலை:

  • அறுவதா இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப ¼ முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புசளி, பால்மந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
     
  • அறுவதா இலையை உலரவைத்து நெருப்பிலிட்டு  அவற்றில் இருந்து வரும் புகையை மென்மையாகக் சுவாசித்து வந்தால் இருமல் தணியும்.
     
  • அறுவதா இலையை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
     
  • அறுவதா இலையுடன் இஞ்சி  (ஒரு துண்டு)  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி விலகும்.
     
  • அறுவதா இலைச் சாற்றுடன் ஒமத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயு , வயிற்றுப் பொருமல் , பெரு வயிறு போன்றவை குணமாகும்.
     
  • அறுவதா இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வந்தால்  குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
     

குறிப்பு: 
அறுவதா இலை மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை என்றும் வழங்கப் பெறும். இதன் இலை மருத்துவப் பயனுடையது.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT