உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- தண்டுக் கீரையுடன் உளுந்து , மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புக் கோளாறுகள் சரியாகும்.
- தண்டுக் கீரையுடன் மிளகையும் , மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
- தண்டுக் கீரையுடன் சிறுபருப்பு ,பூண்டு இரண்டையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.
- தண்டுக் கீரையுடன் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து , சாற்றுக்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.
- தண்டுக் கீரையுடன் , சீரகம் , மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். நீர் எரிச்சல் , நீர் கடுப்பு மறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- தண்டுக் கீரை , துத்தி இலை ,சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் மூலச் சூடு உள்ளிட்ட மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com