உணவே மருந்து

இயற்கை மருத்துவமே இயல்பான மருத்துவம்!

எழில்செல்வி

சித்தா, ஆயுர்வேதா யுனானி என்று மக்கள் பாரம்பரிய மருத்துவத்தை பின்னோக்கி பார்த்து முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். இப்போதெல்லாம் அலோபதி மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என்று, பணியமர்த்தப்படுகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

முதியோர் மருத்துவ சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.எஸ்.நடராசன் மருத்துவமனையில் இயற்கை மருத்துவ நிபுணராக பணிபுரிந்து வருகிறார் டாக்டர் அபிராமி பிரேம். இவர் சென்னை சித்த மருத்துவமனையில் மருத்துவம்
பயின்ற மருத்துவர். 'அலோபதி மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை இயற்கை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துகிறோம். அதாவது, பக்க வாதம், மூட்டு வலியால் அவதிப்பட்டு, ஆனால், மூட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள முடியாதவர்கள், கண் திறக்க முடியாமல் இமைகள் மூடிக்கொண்டே இருப்பது போன்ற நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் தீரவில்லை எனும்போது, மருத்துவர் எங்களை பரிந்துரை செய்வார்கள்.

அது மட்டுமல்ல, மன அழுத்தம், தலைவலி, தூக்கமின்மை என்றும் அவஸ்தைப்படுபவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இயற்கை மருத்துவத்தின் மூலம் தீர்வு தருகிறோம்' என்று கூறுகிறார் டாக்டர் அபிராமி .

இயற்கை மருத்துவம் என்றால் என்ன என்று கேட்டபோது,

'இயற்கை மருத்துவம் என்பது பஞ்ச பூதங்களைக் கொண்டு வைத்தியம் செய்வது.நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மூச்சுப் பயிற்சி, யோகா, இயற்கை உணவு, கலர் தெரபி , மசாஜ் என்றெல்லாம் அடங்கும். இவற்றை படிப்பவர்களும் டாக்டர்கள் என்றே பட்டம் பெறுவர்' என்கிறார்.

கலர் தெரபி என்பது வித்தியாசமாக இருக்கிறதே என்றால் அவரே விளக்குகிறார். 'நோய்களைத் தீர்க்க நிறங்களும் பயன்படுகின்றன. எப்படி உணவுப் பொருட்களில் ஒவ்வொரு நிறங்களும் ஒரு மருத்துவத் தன்மை உள்ளதோ, அது போல நிறங்களின் மூலம் நோய் தீர்க்கும் சிகிச்சையை கலர் தெரபி என்கிறோம். உதாரணமாக தூக்கம் வர வேண்டும் என்றால் மெல்லிய நீல நிற பல்ப் இருந்தால்தான் நல்ல அமைதியான தூக்கம் வரும். அதுபோல வியாதிகளுக்கு ஏற்றது போல கலர் நீர் சிகிச்சை உள்ளது.

டாக்டர் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது இதற்கு என்ன கலர் நீர் அருந்தலாம் என்று பரிந்துரை செய்த பின்னர், நீங்கள் கடைகளில் ஸ்கூல் பிள்ளைகளுக்காக விற்கும் காலர்  பேப்பர்களை வாங்கி, ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, பாத்திரத்தை சுற்றி கலர் பேப்பரை சுற்றி வைத்து கட்டிவிட வேண்டும்.

இந்த நீர் பாத்திரத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வெயிலில் வைத்து, பின்னர் அருந்த வேண்டும்.இது போல தொடர்ந்து செய்தால், எந்த நோய்க்காக நீங்கள் கலர் நீரை பருகுகிறீர்களோ, அந்த நோய் உங்களை விட்டு போய்விடும்.ஆனால், நீரின் நிறம் மாறாது. என்கிறா டாக்டர் அபிராமி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சத்தான இயற்கை உணவாக அவல் பாயசம் செய்வது எப்படி என்று கற்றுத் தருகிறார் இயற்கை மருத்துவர் டாக்டர் அபிராமி பிரேம்.

அவல்  பாயசம் .

தேவையான பொருட்கள்: பிரவுன் அல்லது சிவப்பு அவல் -ஒரு கப், தேங்காய்
பால்-ஒரு கப் பேரீட்சை பழம்,வாழைப்பழம்,சப்போட்டா பழம்,பப்பாளி பழம்
கலந்து-ஒரு கப்,தேன்-தேவையான அளவு,வெல்லம்-தேவையான அளவு.



செய்முறை: அவலை தண்ணீர் தெளித்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.பின்னர் பழங்களை மிக்சியில் போட்டு கூழ் போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், வெல்லம், தேன் சேர்த்தும் அரைக்கலாம்.

இந்த கலவையை தேங்காய் பாலில் சேர்த்து கலந்து சிட்டிகை ஏலக்காய் பொடியைத் தூவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் சாப்பிட கொடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் 200 சர்க்கரை அளவு இருந்தால் கூட வாழைப்பழம், தேனை தவிர்த்து இந்த பாயசத்தை பருகலாம்.

அவல் பாயச பயன்கள்:

தேங்காய் பால்: தேங்காய்ப்பாலில் மட்டும்தான் தாய்ப்பாலில் இருக்கும் ஒரே சத்தானா Lauric Acid எனும் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே, தாய்ப்பாலை நிறுத்திய குழந்தைகள் 6 மாதம் முதலே இந்த பாயசத்தை சாப்பிடலாம்.அதோடு,
வாயிலிருந்து வயிறு மற்றும் ஆசனவாய் வரை உள்ள அனைத்து புண்களையும்
ஆற்றும் சக்தி தேங்காய் பாலுக்கு உண்டு.

தேங்காயில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளது.எனவே, தேங்காய் பால், தேங்காய், தேங்காய் எண்னெயை சமையலில் பயன்படுத்தலாம்.

சிவப்பு அவல்:சிவப்பு அவலில் அனீமிக் எனப்படும் ரத்த சோகையைப் போக்கும் சக்தி உள்ளது. பெண்கள் தவறாமல் இந்த அவள் பாயசத்தை சாப்பிடலாம்.அவல்
சாப்பிட்டால் உடல் எடை கூடாது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் Tryttothan என்கிற ஹார்மோன் சுரக்கும் தன்மை இருப்பதால், பாயசத்தில் சேர்த்து சாப்பிடும்போது நல்ல அந்த ஹார்மோன் சுரந்து நல்ல தூக்கத்தை தூண்டுவிக்கும்

பப்பாளி: பப்பாளி நல்ல நார்ச்சத்து மிக்க பழம்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற பழம்.

வெல்லம்: இப்போது யாரும் சர்க்கரையை அவ்வளவாக உபயோகிப்பதில்லை. காரணம் வெள்ளம் நல்ல இரும்பு சத்துமிக்க ஒரு இனிப்பு. உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்கும்.பெருங்குடல் புண்களை தணிக்கும்.உடலை குளிர்ச்சியாக்கும்.

இத்தனை சத்துள்ள உணவுப் பொருட்களை கொண்டதுதான் அவல் பாயசம்.அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த பாயசம்.

தேங்காய் பாலில் தாய்ப்பாலில் இருக்க கூடிய எதிர்ப்பு சக்தி இருப்பதால், இந்த பாயசத்தை ஹெச் ஐ வி நோயாளிகளும், கேன்சர் நோயாளிகளும் கூட அருந்தலாம். சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், தேனை தவிர்ப்பது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT