உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை கடுகு

கடுகைத் தேவையான அளவு எடுத்து அரைத்து, தொப்புளில் லேசாகப் பற்றுப் போட்டால்,

DIN

கடுகைத் தேவையான அளவு எடுத்து அரைத்து, தொப்புளில் லேசாகப் பற்றுப் போட்டால், நீர்க்கடுப்பு குணமாகும்.

கடுகை இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

கடுகை நீரில் ஊறவைத்து முளைக்க வைத்து, பிறகு அதை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

கடுகை (25 எண்ணிக்கை) , தேன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு, இருமல் குணமாகும்.

கடுகைப் பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

கடுகு (30 கிராம்), கோதுமை  (100 கிராம்) கஸ்தூரி மஞ்சள் (100 கிராம்) இவை மூன்றையும் அரைத்து, முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பற்றுப் போட்டால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

கடுகை, உப்பு , மிளகு தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் வாத, பித்த, கப தோஷங்கள் நீங்கும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT