உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- முடி நன்றாக வளர கோபுரதாங்கி இலைச்சாறு (100 மிலி) , நல்லெண்ணெய் (100மிலி) இவை இரண்டையும் நன்றாக கலந்து பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் இருமுறை தலை குளித்துவந்தால் முடி உதிர்வு நின்று வளர ஆரம்பிக்கும். கண் குளிர்ந்து பார்வைதிறன் அதிகரிக்கும்.
- எலும்புகள் வலுப்பெற கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துஅரை ஸ்பூன் வீதம் கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
- சிறுநீர் எரிச்சல் குணமாக கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, (500 மிலி) யாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீர் எரிச்சல் குறையும்.
- உடல் உறுதியாக இருக்க கோபுரம் தாங்கி இலைப்பொடி , வில்வ இலைப்பொடி , பனங்கற்கண்டு இவை மூன்றையும் சம அளவு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் நாற்பது நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com