உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்க அசோகப் பட்டை (கால் கிலோ) மாவிலங்கப் பட்டை (100 கிராம்) , சுக்கு (25 கிராம்) , கருஞ்சீரகம் (25 கிராம்) ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் மூன்று கிராம் அளவு காலை, மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
- அதிக இரத்தப்போக்கு உடனே நிற்க அசோகப் பட்டையை பொடியாக்கி வைத்துக்கொண்டு அவற்றில் (5 கிராம்) பொடியை எடுத்து கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தப்போக்கு உடனே நிற்கும்.
- வயிற்றுப் போக்கு குணமாக அசோகு பூ , மாம்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை அளவு எடுத்து பாலில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
- மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலி முற்றிலும் குணமாக அசோகப் பட்டைத் தூள் (200 கிராம்) , பெருங்காயத்தூள் (25 கிராம்) இரண்டையும் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும். இவற்றில் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.
- கருச்சிதைவு , பெண் மலடு பிரச்சனை தீர அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு(தோல்) இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 3 சிட்டிகை அளவு எடுத்து காலை, மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும் . இந்த பொடியை (4 மாதங்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை தீரும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com