உணவே மருந்து

நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகள்  நீக்கும் அருமருந்து!

கோவை பாலா


 
பொன்னாங்கண்ணிக்  கீரைப் பொடி
 
தேவையான பொருட்கள்

 
பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கிலோ (நிழலில் உலர்த்தியது)
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25  கிராம்
மஞ்சள் - 10  கிராம்

செய்முறை

நிழலில் உலர்த்திய பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களையும், நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகளையும் நீக்கும். உடலுக்கு மினுமினுப்பு கொடுக்கக் கூடிய  மிகச் சிறந்த உணவுப் பொடி இது. உணவாக மட்டுமல்ல, நல்ல மருந்தாகவும் செயல்படும் தன்மை உடையது.

இரவு படுக்கப் போகும் முன்

  • வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT