முகப்பு
இந்தியா

அத்வானியுடனான சந்திப்பு மன நிறைவை அளிக்கிறது: நரேந்திர மோடி

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 22 மே 2013, 3:26 am IST
பகிர்:

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ஆட்சி மன்றக் குழுவில் முதல்முறையாக கலந்துகொண்ட மோடி அது குறித்து தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருப்பதாவது:

பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பங்கேற்ற மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து 40 நிமிடங்கள் உரையாடியது மிகவும் மன நிறைவைத் தருகிறது. மேலும் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

நரேந்திர மோடிக்கும் அத்வானிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அத்வானியுடனான சந்திப்பு மன நிறைவை  அளித்திருப்பதாக மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.