மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: சாவு 10 ஆக உயர்வு
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மும்பை பகுதியில் மாஹிம் தர்கா என்ற இடத்தில் 4 மாடி குடியிருப்பு திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. முதலில் ஒரு மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தொடர்ந்து இடிபாடுகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
Advertisement
இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.