முகப்பு
இந்தியா

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: சாவு 10 ஆக உயர்வு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 12 ஜூன், 2013 at 12:57 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய மும்பை பகுதியில் மாஹிம் தர்கா என்ற இடத்தில் 4 மாடி குடியிருப்பு திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. முதலில் ஒரு மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இடிபாடுகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.