முகப்பு
இந்தியா

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: சாவு 10 ஆக உயர்வு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 12 ஜூன் 2013, 12:57 am IST
பகிர்:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய மும்பை பகுதியில் மாஹிம் தர்கா என்ற இடத்தில் 4 மாடி குடியிருப்பு திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. முதலில் ஒரு மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இடிபாடுகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.