குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
டெலிகிராம் குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் தடைக்கு எதிரான வழக்கில், புதிய கருப்பு தளம், குற்றவாளிகளை ஒன்றிணைக்கவும் அவர்களது செயல்பாடுகளை மேற்கொள்ளவும் டெலிகிராம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
Advertisement
Advertisement
நீட் மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஏற்கெனவே டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் உத்தரவால் சுமாா் 15 கோடி டெலிகிராம் பயனாளா்கள் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்திருந்தது. அந்த மனு, உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) இளநிலை மறுதேர்வுகளுக்கு முன்னதாக, ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராமின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்த அரசின் முடிவை எதிர்த்து டெலிகிராம் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வாதங்களை முன்வைத்துள்ளது.
"டெலிகிராம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களை இணைக்கும் ஒரு புதிய டார்க் வெப் தளமாக மாறியுள்ளது. குற்றவாளிகள், டீப் வெப் இணைப்புகள் மூலம் டார்க் வெப் மன்றங்களுடன் இணைக்கும் சேனல்களில் இணைப்புகளைப் பதிவிட டெலிகிராமை விரைவாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், குற்றவாளிகளைக் கண்காணிப்பதும், அவர்கள் மீது குற்றம் சாட்டுவதும் அதிகாரிகளுக்குக் கடினமாகியுள்ளது," என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 2026-இல் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்டிருந்த கும்பல்களால் டெலிகிராம் (Telegram) செயலி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த கவலைகளின் அடிப்படையிலேயே அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இந்தக் கசிவு காரணமாகவே அத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
'நீட் மாஃபியா' (Neet Mafia) என்ற டெலிகிராம் சேனல், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்களைத் தீவிரமாகப் பரப்பி வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா்மேத்தா ஆஜராகி வாதாடுகையில், மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது அதிா்ச்சியளிக்கும் தகவலை தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
டெலிகிராம் தடை
மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலி நேற்று முதல் செயல்படவில்லை. கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் செயலி பதிவிறக்க தளத்தில் இருந்து டெலிகிராம் நீக்கப்பட்டுள்ளது.
Central Government argues in court that Telegram serves as a haven for criminals and terrorists.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.