முகப்பு
இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விலகல்

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கிலிருந்து சிபிஐ தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா விலகி உள்ளார். இந்த சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து இதுவரை மூன்று பேர் விலகி உள்ளனர்.

Updated On : 12 ஜூலை 2013, 3:53 am IST
பகிர்:

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கிலிருந்து சிபிஐ தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா விலகி உள்ளார். இந்த சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து இதுவரை மூன்று பேர் விலகி உள்ளனர்.

இவருக்கு முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வந்த மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித் விலகியதையடுத்து, சித்தார்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதன் காரணமாக, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல், இந்த வழக்கிலிருந்து விலகினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.