பேரறிவாளன் மனுவை நிராகரித்தது மத்திய தகவல் ஆணையம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளனின் மனுவை மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளனின் மனுவை மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கான காரணத்தை கேட்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், மத்திய தகவல் ஆணையத்துக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை நிராகரித்து மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங் பிறப்பித்த உத்தரவில், "கருணை மனு விவகாரங்களில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை, அதிகாரிகளின் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டே குடியரசுத் தலைவர் முடிவு செய்கிறார். இது தொடர்பான விவரங்களை அரசியல் சாசன விதி 74(2)-ன்படி வெளியிட முடியாது. இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளது.
Advertisement
மத்திய தகவல் ஆணையமும் அரசியல் சாசன விதிகளுக்கு உள்பட்டதாகும். எனவே, தாங்கள் கேட்ட தகவலை வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.