திருமலையில் ஒருங்கிணைந்த லக்கேஜ் மையம் திறப்பு
திருமலையில் ஒருங்கிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாசராஜு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
திருமலையில் ஒருங்கிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாசராஜு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
திருமலைக்கு வரும் பகதர்கள் தங்கள் உடைமைகள், செல்போன்கள், பாதணிகள் முதலியவற்றை வைக்க திருமலை முழுவதும் தேவஸ்தானம் 8 கவுன்ட்டர்களை ஏற்படுத்தி உள்ளது.
பக்தர்கள் தங்கள் உடைமைகளை எங்கு வைக்கிறார்களோ அங்கே சென்று திரும்ப பெற வேண்டும்.
Advertisement
இதனால் பக்தர்கள் பெறும் சிரமத்துக்கு உள்ளாவதை அறிந்து திருமலையில் உள்ள பழைய அன்னதான கூடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் பக்தர்கள் தங்களது லக்கேஜ் செல்போன் மற்றும் பாதணிகளை எங்கு கொடுத்தாலும் ஒருங்கிணைக்கபட்ட மையத்தில் (பிஏசி4) பெற்றுக்கொள்ளலாம்.
இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
ரூ. 300, ரூ.50 மற்றும் சுபதம் கவுன்ட்டர்கள் அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் எண் 5லும், ஏஐசி டிஸ்பென்சரி அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் எண் 8லும் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் மற்றும் எஸ்எம்சி அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் 9 மற்றும் 10லும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் 15 நாட்களுக்குள் இது முழு அளவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.