முகப்பு
இந்தியா

"தெலங்கானா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது'

தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 2:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தனி தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement

தெலங்கானாவை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது வீண். தனி தெலங்கானா மாநிலம் உருவாகப் போவதாக அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையில் இல்லை.

மேலும் ஹைதராபாத் என்பது ஆந்திரத்தில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும். யாரும் யாரையும் வெளியில் அனுப்ப உரிமை இல்லை.

அப்படி யாராவது அதைத் தடுத்தால் அதற்காக போராடாமல் மத்திய அமைச்சர் அந்தோனி தலைமையிலான கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.