தலித்தை முதல்வர் ஆக்காததால் ஏமாற்றம்: மல்லிகார்ஜுன கார்கே
கர்நாடகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்காதது அந்தச் சமுதாய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கர்நாடகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்காதது அந்தச் சமுதாய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யாரை நியமிக்க வேண்டுமென்பதை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அனைவரின் கடமை.
எனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்பதால் வடகர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Advertisement
Advertisement
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு சட்டம் - ஒழுங்கை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி தரவில்லையே என்ற ஏமாற்றம் அந்தச் சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு கட்சி மேலிடம் தகுந்த நேரத்தில் தீர்வு காணும்.
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சியின், ஆட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.