இந்தியா

வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

PTI

வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் ஆறாவது திருத்தத்தின்படி நாட்டில் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சில வாகனங்களுக்கு விலக்கு அளித்து ஆணையிடப்பட்டது.

அதன்படி, 3500 கிலோவுக்கு குறைவானதும், 8 இருக்கைகளுக்கு மிகாத நான்குசக்கர வாகனங்கள் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுரக்க்ஷா பவுண்டேஷன் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களாலேயே அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என். வி. ரமணன் ஆகியோர், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான கொள்முதல்  தொடங்கி அதை பொருத்துவது வரை, ஒரு தெளிவான வரைமுறைகளை வகுக்கவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT