மும்பை: நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகாந்த் அனேகர் இன்று தீர்ப்பை வெளியிட்டார்.
இவ்வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அபு ஜுண்டால் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.